செய்திகள்
சிவகங்கையில் இன்று ஆர்ப்பாட்டம்: திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்
சிவகங்கையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றால் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என்று வாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், முருகன் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றால் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என்று அந்த பகுதியில் வாட்ஸ் அப்களில் தகவல் பரவியது.
இந்த தகவலை வைத்து கட்சி நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இருந்து சிவகங்கைக்கு புறப்பட்டுச்செல்கிறார்.
கொலை மிரட்டலை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வரையும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்திலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், முருகன் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றால் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என்று அந்த பகுதியில் வாட்ஸ் அப்களில் தகவல் பரவியது.
இந்த தகவலை வைத்து கட்சி நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இருந்து சிவகங்கைக்கு புறப்பட்டுச்செல்கிறார்.
கொலை மிரட்டலை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வரையும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்திலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொலை மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.