செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது போலீசில் புகார்

Published On 2017-04-20 16:18 GMT   |   Update On 2017-04-20 16:18 GMT
நிலம் வாங்கித்தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

சிவகங்கை:

தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்த முத்துக்குமார், நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ரியல் ஸ்டேட் புரோக்கர் கருணாகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும், ரூ. 3 லட்சம் கொடுத்தால் அதனை வாங்கித் தருகிறேன் என்றும் கூறினார்.

அதை நம்பி ரூ. 3 லட்சம் அவரிடம் கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்களாகியும் நிலத்தை அவர் வாங்கித் தரவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை. எனவே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன். அதையும் தராமல் மோசடி செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News