செய்திகள்
திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.22 லட்சம்
திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் வருமானமாக 22 லட்சத்து 44 ஆயிரத்து 838 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 112 கிராம் தங்கமும், 1340 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.
திருப்போரூர்:
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
கடந்த மாதம் 10-ந் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இந்நிலையில் வேலூர் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் தனபால் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் இந்துஅறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் நற்சோனை, கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறந்து கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டன.
இதில் 22 லட்சத்து 44 ஆயிரத்து 838 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 112 கிராம் தங்கமும், 1340 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.
மேலும், சிங்கப்பூர், சவூதி, ஓமன், அமெரிக்கா நாட்டு கரன்சிகள் 13 எண்ணிக்கை இருந்தன. இது கடந்த ஒன்றரை மாத உண்டியல் வருமானம் ஆகும்.
உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், சென்னை கோபிகாரமணா அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் திருப்போரூர் அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
கடந்த மாதம் 10-ந் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இந்நிலையில் வேலூர் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் தனபால் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் இந்துஅறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் நற்சோனை, கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறந்து கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டன.
இதில் 22 லட்சத்து 44 ஆயிரத்து 838 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 112 கிராம் தங்கமும், 1340 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.
மேலும், சிங்கப்பூர், சவூதி, ஓமன், அமெரிக்கா நாட்டு கரன்சிகள் 13 எண்ணிக்கை இருந்தன. இது கடந்த ஒன்றரை மாத உண்டியல் வருமானம் ஆகும்.
உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், சென்னை கோபிகாரமணா அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் திருப்போரூர் அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
இதையொட்டி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.