செய்திகள்
சென்னை விமானத்தில் வந்த மும்பை தொழில் அதிபர்களிடம் 45 கிலோ தங்க நகைகள்
சென்னை விமானத்தில் வந்த மும்பை தொழில் அதிபர்களிடம் 45 கிலோ தங்க நகைகள் இருந்தது மத்திய தொழில் படையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை வருமான வரி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:
மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.30 மணியளவில் ஒரு தனியார் நிறுவன விமானம் வந்தது.
இதில் பயணம் செய்தவர்களின் கைப்பை மற்றும் சூட்கேஸ்களை மத்திய தொழில் படையினர் சோதனையிட்டனர். அவர்களில் 3 பேரிடம் 45 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.16.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் என தெரியவந்தது.
இவர்கள் தங்கநகை வியாபாரம் செய்வதாகவும், சென்னை நகை கடைகளில் புதிதாக செய்யப்பட்ட நகைகளை வாங்க வந்ததாகவும் கூறினர். மேலும் அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காட்டினர்.
இருந்தாலும் அவர்கள் 3 பேரும் சென்னை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.30 மணியளவில் ஒரு தனியார் நிறுவன விமானம் வந்தது.
இதில் பயணம் செய்தவர்களின் கைப்பை மற்றும் சூட்கேஸ்களை மத்திய தொழில் படையினர் சோதனையிட்டனர். அவர்களில் 3 பேரிடம் 45 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.16.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் என தெரியவந்தது.
இவர்கள் தங்கநகை வியாபாரம் செய்வதாகவும், சென்னை நகை கடைகளில் புதிதாக செய்யப்பட்ட நகைகளை வாங்க வந்ததாகவும் கூறினர். மேலும் அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காட்டினர்.
இருந்தாலும் அவர்கள் 3 பேரும் சென்னை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வருமான வரி செலுத்தியுள்ளனரா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.