செய்திகள்

சீர்காழி அருகே கார் மோதி பெண் குழந்தை பலி

Published On 2016-12-21 17:26 IST   |   Update On 2016-12-21 17:26:00 IST
சீர்காழி அருகே கார் மோதி பெண் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வருசைபத்து ஆமப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். டீக்கடை தொழிலாளி.இவரது மனைவி அறிவழகி. இவர்களுக்கு ஜான்சிராணி என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. சார்லசின் தாய் அமுதா பேத்தியை தூக்கி வைத்து கொண்டு வீடு அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த காரின் பக்கவாட்டு கண்ணாடி குழந்தை ஜான்சிராணி மீது மோதியது. இதில் கீழே விழுந்த குழந்தை பலத்த காயம் அடைந்தது.

உடனே சார்லஸ் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் குழந்தையின் பாட்டி அமுதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் வேட்டங்குடி ஒத்தவெளி தெருவை சேர்ந்த சத்திய மூர்த்தியை கைது செய்தனர்.

Similar News