செய்திகள்

ஈரோட்டில் சசிகலா பேனர் கிழிப்பு

Published On 2016-12-16 11:13 GMT   |   Update On 2016-12-16 11:13 GMT
ஈரோடு பெருந்துறை ரோட்டில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா படம் இணைத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில் சசிகலா படம் மட்டும் கிழிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு:

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் அஞ்சலி போஸ்டர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து உள்ளனர்.

மேலும் பல இடங்களில் ஜெயலலிதாவுக்கு அடுத்தப் படியாக சசிகலா பொதுச் செயலாளராக வர வேண்டும். கட்சியை வழி நடத்த வேண்டும் எனவும் பேனர்கள் வைத்துள்ளனர்.

ஈரோடு பெருந்துறை ரோட்டில் ஜெயலலிதா படத்துடன் சசிகலா படம் இணைத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இதில் 3 பேனர்களிலும் சசிகலா படம் மட்டும் கிழிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். மேலும் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க கிழிக்கப்பட்ட பேனர்களை போலீசார் எடுத்து சென்று விட்டனர்.

சசிகலா படத்தை கிழித்த ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் கூறி உள்ளனர்.

Similar News