செய்திகள்

காரைக்குடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து டீக்கடையில் தீ விபத்து

Published On 2016-10-04 10:25 IST   |   Update On 2016-10-04 10:25:00 IST
காரைக்குடியில் டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3½ லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரெயில்வே பீடர் ரோட்டைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி மாரியம்மாள் (வயது55). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் கடை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அருகிலேயே தீயணைப்பு நிலையம் இருந்ததால் வீரர்கள் விரைந்து செயல்பட்டு போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த ரூ.3½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News