செய்திகள்

வேதாரண்யத்தில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

Published On 2016-10-02 10:42 IST   |   Update On 2016-10-02 10:42:00 IST
வேதாரண்யத்தில் அனுமதி பெறாமல் மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 960 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் அவரிக்காடு பகுதியில் அனுமதி பெறாமல் பார் நடத்தி மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு உத்தரவின்பேரில் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அனுமதி பெறாமல் மதுபானம் விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அப்போது அங்கு மதுபானம் விற்ற கடை உரிமையாளர் அண்ணாதுரை (வயது47), விற்பனையாளர் தனபால் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடையில் அனுமதியின்றி விற்பனைக்காக 20 பெட்டிகளில் 960 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News