செய்திகள்

பக்ரீத் பண்டிகை: ஈரோடு மாவட்டத்தில் 42 ஈத்கா மைதானத்தில் விசே‌ஷ தொழுகை

Published On 2016-09-13 16:51 IST   |   Update On 2016-09-13 16:52:00 IST
பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 200 பள்ளி வாசல்களிலும், 42 ஈத்கா விசே‌ஷ மைதானத்திலும் இன்று காலை விசே‌ஷ தொழுகை நடந்தது.
ஈரோடு:

தியாக திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 200 பள்ளி வாசல்களிலும், 42 ஈத்கா விசே‌ஷ மைதானத்திலும் இன்று காலை விசே‌ஷ தொழுகை நடந்தது.

ஈரோடு வ.உ.சி பூங்கா வளாகத்தில் இன்று காலை விசே‌ஷ தொழுகை நடந்தது. ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி முகமது ஹிபாயத்துல்லா தலைமையில் நடந்த இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்ததும் சிறுவர்-சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் கட்டி அரவணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஈரோடு பெரிய அக்ரகாரம், திருநகர் காலனி, கருங்கல் பாளையம், புது மஜீத் வீதி, மரப்பாலம் கொல்லம்பாளையம், நாடார் மேடு, மற்றும் கோபி, சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் இன்று சிறப்பு தொழுகை நடந்தது.

இதன்பிறகு ஆட்டு இறைச்சியை 3 ஆக பிரித்து அதில் ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தனக்கும் இன்னொரு பங்கை ஏழை இஸ்லாமியர்களுக்கும் கொடுத்து தியாக திருநாளான பக்ரீத்தை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

ஈரோடு ஸ்டேட் பாங்கி ரோட்டில் உள்ள மைதானத்தில் தவ்ஹித் ஜமாத்தின் பழக்கார தெரு கிளை சார்பில் தலைவர் சிராஜுதீன் தலைமையில் இன்று விசே‌ஷ தொழுகை நடந்தது. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

Similar News