செய்திகள்

சிவகங்கை அருகே 2 போலி டாக்டர்கள் கைது

Published On 2016-09-02 10:12 IST   |   Update On 2016-09-02 10:13:00 IST
சிவகங்கை அருகே எம்.பி.பி.எஸ். படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் மற்றும் மதகுபட்டி பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிலர் ஆஸ்பத்திரி நடத்துவதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் விஜயன் மதமடக்கிக்கு புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து டாக்டர் விஜயன் மதமடக்கி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஒக்கூரில் உள்ள நிர்மலா (வயது43) என்பவரது கிளினிக்கில் சோதனை நடத்தினர். அப்போது அவர் பி.எஸ்.சி. நர்சிங் மட்டும் படித்துவிட்டு அங்கு கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதேபோல் மதகுபட்டியில் பாலசுப்பிரமணியன் (64) என்பவர் பி.யூ.சி. படித்துவிட்டு ஆஸ்பத்திரி நடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் விஜயன் மதமடக்கி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்து நிர்மலா, பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Similar News