செய்திகள்
காரைக்குடியில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் தாய்-மகள் கைது
சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட தாய்-மகளை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசில் 14 வயது சிறுமி புகார் கொடுத்தார். அதில் ஒரு கும்பல் தாயிடம் இருந்து தன்னை விலைக்கு வாங்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காரைக்குடி செக்காலை முதல் வீதியில் ஒரு கும்பல் வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த பூமயில், அவரது மகள் சொர்ணலதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த 13, 14 வயதுடைய 2 சிறுமிகளையும் மீட்டனர். விசாரணையில் தாய், மகள் இருவரும் காரைக்குடியின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளை வைத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசில் 14 வயது சிறுமி புகார் கொடுத்தார். அதில் ஒரு கும்பல் தாயிடம் இருந்து தன்னை விலைக்கு வாங்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காரைக்குடி செக்காலை முதல் வீதியில் ஒரு கும்பல் வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த பூமயில், அவரது மகள் சொர்ணலதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த 13, 14 வயதுடைய 2 சிறுமிகளையும் மீட்டனர். விசாரணையில் தாய், மகள் இருவரும் காரைக்குடியின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளை வைத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.