செய்திகள்
மானிய விலையில் 3 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்ககோரி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
மானிய விலையில் 3 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கக்கோரி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து தினந்தோறும் 310 விசைப்படகுகளில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.
குறிப்பாக இந்த மீனவர்களின் வலைகளில் இறால் மற்றும் விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைத்து வந்தன. தற்போது மீன்பாடு தலைகீழாக குறைந்துள்ளது. அத்துடன் மீன்கள் போதிய அளவில் கிடைத்தபோதும் மீன்களின் விலை மிகவும் குறைந்துவிட்டது.
இதனால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி மாதந்தோறும் மீனவர்களுக்கு அரசு சார்பில் 1,500 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டீசல் 15-ந்தேதிக்குள் தீர்ந்து விடுகிறது.
அதற்குமேல் வெளி மார்க்கெட்டில் மானியம் அல்லாத டீசலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஒரு முறை மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு சென்று வந்தால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுவதாகவும் கூறிவந்தனர்.
எனவே இதனை சரிக்கட்டும் வகையில் தமிழக அரசு மானிய விலையில் வழங்கும் டீசலை 1,500 லிட்டரில் இருந்து 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர். மேலும் தினந்தோறும் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.
அரசு, மீனவர்களின் பிரச்சினை குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து தினந்தோறும் 310 விசைப்படகுகளில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.
குறிப்பாக இந்த மீனவர்களின் வலைகளில் இறால் மற்றும் விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைத்து வந்தன. தற்போது மீன்பாடு தலைகீழாக குறைந்துள்ளது. அத்துடன் மீன்கள் போதிய அளவில் கிடைத்தபோதும் மீன்களின் விலை மிகவும் குறைந்துவிட்டது.
இதனால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி மாதந்தோறும் மீனவர்களுக்கு அரசு சார்பில் 1,500 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டீசல் 15-ந்தேதிக்குள் தீர்ந்து விடுகிறது.
அதற்குமேல் வெளி மார்க்கெட்டில் மானியம் அல்லாத டீசலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஒரு முறை மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு சென்று வந்தால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுவதாகவும் கூறிவந்தனர்.
எனவே இதனை சரிக்கட்டும் வகையில் தமிழக அரசு மானிய விலையில் வழங்கும் டீசலை 1,500 லிட்டரில் இருந்து 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர். மேலும் தினந்தோறும் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.
அரசு, மீனவர்களின் பிரச்சினை குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.