செய்திகள்

மானாமதுரை அருகே மாணவியை கொன்ற வாலிபர் கைது

Published On 2016-07-13 09:26 IST   |   Update On 2016-07-13 09:26:00 IST
மானாமதுரை அருகே மாணவியை கொன்ற மாணவியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை:

மாணவியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த 11 வயது மாணவி காளீஸ்வரி நேற்று கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை சுவாதி போன்று, இவரும் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.

இவரை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கொலை செய்ததாக கூறப்படும் லாரி டிரைவர் கார்த்திக், மாணவி காளீஸ்வரிக்கு அண்ணன் முறை ஆவார். இவரும் கழுத்து அறுபட்டு நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு கழுத்தில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தையல் போடப்பட்டுள்ளதால் கார்த்திக் பேச முடியாத நிலையில் உள்ளார்.

இந்த நிலையில் அவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வார்டை சுற்றிலும் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கார்த்திக்கை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார் அவனிடம் வாக்குமூலம் வாங்குவதில் தீவிரமாக உள்ளனர். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று அவனிடம் எப்படியாவது வாக்குமூலம் வாங்கிவிட வேண்டும் என போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

காளீஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய கார்த்திக் முயன்றாரா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவராமல் போலீசார் தவித்து வருகின்றனர். காளீஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு அல்லது கார்த்திக் வாக்குமூலம் கிடைத்தால் தான் இந்த வழக்கின் உண்மை நிலை தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.

Similar News