செய்திகள்
பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகர் கொலை: போலீஸ் நிலையத்தில் மருமகன் சரண்
பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகர் கொலையில் போலீஸ் நிலையத்தில் மருமகன் சரணடைந்துள்ளார்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள நடுகாப்பிளியப்பட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது 69). இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆவார். இவருடைய மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
அன்னகொடியின் தங்கை சந்திராவின் மகன் ராஜா (42). இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், அன்னக்கொடிக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்கிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அன்னக்கொடியின் வீட்டு கதவை ராஜா உடைத்துள்ளார்.
இதை அவர் தட்டிக்கேட்டார். அப்போது அங்கிருந்து சென்ற ராஜா, நள்ளிரவில் அரிவாளுடன் மீண்டும் அன்னக்கொடியின் வீட்டுக்கு வந்தார். பிறகு அன்னக்கொடியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவருடைய உயிர் பிரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய ராஜாவை தேடிவந்தனர். இதற்கிடையே அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள நடுகாப்பிளியப்பட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது 69). இவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆவார். இவருடைய மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
அன்னகொடியின் தங்கை சந்திராவின் மகன் ராஜா (42). இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், அன்னக்கொடிக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்கிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அன்னக்கொடியின் வீட்டு கதவை ராஜா உடைத்துள்ளார்.
இதை அவர் தட்டிக்கேட்டார். அப்போது அங்கிருந்து சென்ற ராஜா, நள்ளிரவில் அரிவாளுடன் மீண்டும் அன்னக்கொடியின் வீட்டுக்கு வந்தார். பிறகு அன்னக்கொடியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவருடைய உயிர் பிரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய ராஜாவை தேடிவந்தனர். இதற்கிடையே அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.