விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்

Published On 2025-09-14 12:28 IST   |   Update On 2025-09-14 12:28:00 IST
  • இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
  • ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஜாஸ்மின் லம்போரியா ஆவர்.

பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் (பெதர் வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) வீழ்த்தினார். ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவர்.

உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட் டம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். மேரி கோம் (6 தடவை), நிகாத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லவ் லினா போர்க்கோஹெய்ன் சவிதா புரா (தலா 1 தடவை) ஆகியோர் ஏற்கனவே உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இருந்தனர்.

தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரனுக்கு (80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் அகதா காஸ்மார்ஸ்கா விடம் 2-3 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை பூஜாவுக்கு (80 கிலோ பிரிவு) வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அவர் அரை இறுதியில் எமிலி அஸ்கித்திடம் (இங்கிலாந்து) 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

Tags:    

Similar News