டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, படோசா முதல் சுற்றில் வெற்றி

Published On 2025-02-18 19:48 IST   |   Update On 2025-02-19 18:00:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-2, 6-1 என பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News