வீடியோ: வெற்றி பெற வேண்டிய போட்டி: காயம் ஏற்பட்டு வெளியேறியதால் கண்கலங்கிய வீரர்: ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்
- முதல் செட்டை டிமிட்ரோ 6-3 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார்.
- 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்றில் பல்கேரியாவை சேர்ந்த 19-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை சின்னர் 3-6 என்ற கணக்கில் இழந்தார். 2-வது செட்டையும் அவர் 5-7 என்ற கணக்கில் தோற்றார். 3-வது செட்டில் 2-2 என்ற சமநிலை இருந்த போது டிமிட்ரோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என அறிவித்தனர்.
இதனையடுத்து அவர் இந்த போட்டியில் இருந்து விலகியதால் விலகியதால் சின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காயத்தால் இந்த போட்டியில் தொடர முடியாத நிலையில் கண்கலங்கியபடி அவர் மைதானத்திற்கு வந்தார். அவரை சக வீரரான சின்னர் கட்டியணைத்தப்படி ஆறுதல் கூறினார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத டிமிட்ரோ தெம்பி தெம்பி அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்ற படி மரியாதை செலுத்தினர்.
முதல் நிலை வீரரான சின்னரை எளிதாக வீழ்த்த வேண்டிய நிலையில் காயம் அவரது வெற்றியை பரித்தது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.