டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

Published On 2025-08-12 21:40 IST   |   Update On 2025-08-12 21:40:00 IST
  • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

இதில் கலின்ஸ்கயா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெண்டா அனிசிமோவா 3வது சுற்றுடன் வெளியேறினார்.

அமெண்டா அனிசிமோவா விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News