விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

Published On 2026-01-16 04:46 IST   |   Update On 2026-01-16 04:46:00 IST
  • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
  • 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.

புதுடெல்லி:

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் ஜோடி முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடிஅடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

Tags:    

Similar News