விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி

Published On 2025-10-17 22:07 IST   |   Update On 2025-10-17 22:07:00 IST
  • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
  • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

கோபன்ஹேகன்:

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் ரியான் ஆர்டினோ-ரஹ்மத் ஹிதயத் ஜோடியுடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-15, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News