விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி

Published On 2025-10-17 01:24 IST   |   Update On 2025-10-17 01:24:00 IST
  • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
  • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கோபன்ஹேகன்:

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் யாங் போ ஹன்-ஜங் ஹு லி ஜோடியுடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News