விளையாட்டு
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கோபன்ஹேகன்:
டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் யாங் போ ஹன்-ஜங் ஹு லி ஜோடியுடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.