விளையாட்டு
பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு- மெஸ்சி டெல்லி செல்வதில் தாமதம்
- மெஸ்சி இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது.
- பிற்பகலில் மெஸ்சி டெல்லி சென்றடைவார் என்று தகவல் வெளியானது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நேற்று அவர் மும்பை சென்றார்.
அங்கு காட்சிப் போட்டியில் விளையாடினார். இதில் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
மெஸ்சி இன்று காலை மும்பையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது. டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகலில் மெஸ்சி டெல்லி சென்றடைவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மெஸ்ஸியின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.