ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அரை சதமடித்து அசத்தினார்.
கபடி போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி வங்காளதேசத்தை 55-18 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வீழ்த்தியது.
800 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சந்தா மற்றும் ஹர்மிலன் பெயின் ஆகியோர் முன்னேறினர்.
நேபாளத்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய அணி 3.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்துள்ளது.
வில்வித்தைப் போட்டியின் காம்பவுண்டு தனிநபர் காலிறுதியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி பிலிப்பைன்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
வில்வித்தைப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை ஜோதி வெண்ணாம் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 60 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து நான்காவது இடத்திலேயே உள்ளது.
ஏழு பதக்கங்கள்:
ஆசிய விளையாட்டில் இந்தியா இன்று மட்டும் மூன்று வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது.
ஆண்கள் டெகாத்லான்:
இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர் 4260 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். இவர் இரண்டாம் இடத்தில் உள்ள வீரரை விட 250 புள்ளிகள் அதிகமாக பெற்று இருக்கிறார்.