விளையாட்டு

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி

Published On 2026-02-26 03:56 IST   |   Update On 2026-02-26 03:56:00 IST
  • ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகின்றன.
  • இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்றார்.

முலீம் ஆன்தெர்ரூர்:

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் முலீம் ஆன்தெர்ரூர் நகரில் நடைபெற உள்ளன.

இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கிரண் ஜார்ஜ், வீராங்கனை தான்வி சர்மா உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் மிகோலஜ் உடன் மோதினார்.

இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் 2வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லின் சுன் யீ உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News