விளையாட்டு

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி - மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது

Published On 2023-08-14 04:18 IST   |   Update On 2023-08-14 04:18:00 IST
  • மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்குகிறது.
  • இந்தப் போட்டி வரும் 20 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்கு போட்டி இன்று தொடங்கி வரும் 20- ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உள்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்காளதேசம், மியன்மார் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

3000 தர புள்ளிகளைக் கொண்ட இந்த சர்வதேச போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர்.

Tags:    

Similar News