என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச அலைச்சறுக்கு"

    • மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்குகிறது.
    • இந்தப் போட்டி வரும் 20 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்கு போட்டி இன்று தொடங்கி வரும் 20- ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உள்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்காளதேசம், மியன்மார் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

    3000 தர புள்ளிகளைக் கொண்ட இந்த சர்வதேச போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர்.

    • ஆண்கள் பிரிவின் 48 சுற்றுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் நாட்டு வீரர்கள் பங்கேற்று சாகசம்
    • போட்டிகள் வரும் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது

    தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை கடந்த 14-ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.

    இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து 70 வீரர்கள் வந்துள்ளனர்.

    இதில் 3-வது நாளான நேற்று ஆண்கள் பிரிவின் 48 சுற்றுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் நாட்டு வீரர்கள் பங்கேற்று சாகசம் செய்தனர்.

    இதில் ஜப்பான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். இப்போட்டிகள் வரும் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது. கடற்கரை கோயில் வடபகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து போட்டியை பார்க்க பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×