கிரிக்கெட் (Cricket)

மகளிர் ஒருநாள் உலக கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 340 ரன்கள் குவிப்பு

Published On 2025-10-23 20:02 IST   |   Update On 2025-10-23 20:02:00 IST
  • நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி அரைசதம் அடித்தார்.

இதற்கிடையே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

Tags:    

Similar News