கிரிக்கெட் (Cricket)

மகளிர் டி20: 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

Published On 2026-02-21 17:25 IST   |   Update On 2026-02-21 17:25:00 IST
  • இந்தியா 176 ரன்கள் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா 82 ரன்கள் விளாசினார்.
  • ஆஸ்திரேலியாவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போடடி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவிததது. ஸ்மிரிதி மந்தனா 82 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ரன்களும் விளாசினர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்தரேலியா களம் இறங்கியது. அந்த அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆஸ்லே கார்ட்னெர் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சாரணி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியிலும் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

Similar News