கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுடன் நாக் அவுட்டில் மோதும் வாய்ப்பு எற்பட்டால்... பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்வது என்ன?

Published On 2026-02-21 12:20 IST   |   Update On 2026-02-21 12:20:00 IST
  • இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் முன்னர் அறிவித்திருந்தார்.
  • பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது.

டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடந்து வருகிறது.

வங்கதேச அணிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இழைக்கப்பட்ட அநீதிக்கு ஆதரவாக, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் முன்னர் அறிவித்திருந்தார்.

பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐசிசி மற்றும் பிற நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி 15 அன்று நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம் இறுதி நேரத்தில் புறக்கணிப்பு முடிவு மாற்றப்பட்டது.

இந்நிலையில் நாக் அவுட் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் அரசு முடிவையே கிரிக்கெட் வாரியம் பின்பற்றும் என கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அரசின் அறிவுறுத்தல்களையே வாரியம் பின்பற்றும். ஒருவேளை தொடரின் நாக்-அவுட் சுற்றில் மீண்டும் இந்தியாவுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அப்போதும் அரசின் முடிவே இறுதியானது என வாரியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Tags:    

Similar News