கிரிக்கெட் (Cricket)

இந்தியா அரையிறுதி சுற்றுக்கு வராது- முன்னாள் பாகிஸ்தான் வீரர் கணிப்பு

Published On 2026-02-21 07:58 IST   |   Update On 2026-02-21 07:58:00 IST
  • சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
  • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது

நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

இந்திய அணியின் போட்டிகளை பார்க்கும் போது அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News