தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து நாளை மோதல்- ஹாட்ரிக் வெற்றி யாருக்கு?
- ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மர்க்ராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் கனடாவை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தோற் கடித்தது. 2-வது சூப்பர் ஓவரில் தான் வெற்றி பெற முடிந்தது.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் அயர்லாந்து- ஓமன் (கொழும்பு, காலை 11 மணி), இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (கொல்காத்தா, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
அயர்லாந்து, ஓமன் அணிகள் முதல் 2 ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றி யாருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் 2-வது வெற்றி யாருக்கு ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.