கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய 2-வது பாகிஸ்தான் வீரர்- பர்ஹான் புதிய சாதனை

Published On 2026-02-18 16:58 IST   |   Update On 2026-02-18 16:58:00 IST
  • நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பர்ஹான் சதம் விளாசினார்.
  • டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பர்ஹான் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக அகமது ஷெஹ்சாத் சதம் விளாசி இருந்தார்.

மேலும் டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய ஆசிய வீரர்களில் இவர் 6-வது வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக வங்கதேச அணியை சேர்ந்த தமீம் இக்பால், பாகிஸ்தானை சேர்ந்த அகமது ஷெஹ்சாத், இலங்கையை சேர்ந்த ஜெயவர்தனே, இந்தியாவை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, இலங்கையை சேர்ந்த பதும் நிசங்கா ஆகியோர் சாதனை பட்டியலில் உள்ளனர்.

Tags:    

Similar News