கிரிக்கெட் (Cricket)

எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் - பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்

Published On 2026-02-18 11:38 IST   |   Update On 2026-02-18 11:38:00 IST
  • சிறப்பாக பந்துவீசி எதிர் அணி வீரர்களை உஸ்மான் தாரிக் திணறிடித்து வருகிறார்.
  • உஸ்மான் தாரிக் பந்துவீசும் முறை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் நின்றுவிட்டு வீசுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சிறப்பாக பந்துவீசி எதிர் அணி வீரர்களை உஸ்மான் தாரிக் திணறிடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் என்று உஸ்மான் தாரிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "எம்.எஸ்.தோனி திரைப்படம் பார்த்த பிறகுதான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, எங்கள் இருவரது கதைகளும் ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் ஒரு வேலையில் இருந்தேன், அவரும் ஒரு வேலையில் இருந்தார். வரலாறு படைத்த ஒருவர் இங்கே இருக்கிறார் என உணர்ந்தேன்.

நானும் சாதாரண மனிதன்தான். அதே பாதையை நான் தொடரலாம், ஆனால் மற்றவர்களைப் போல நான் நிறைய கடின உழைப்பு செலுத்த வேண்டும். எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன்" என்று தெரிவித்தார்.

Similar News