கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபர்: ரிக்கி பாண்டிங்

Published On 2025-06-07 20:02 IST   |   Update On 2025-06-07 20:02:00 IST
  • சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமித்தது சரியான நகர்வு என நினைக்கிறேன்.
  • ஐபிஎல் தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டனாக அறிமுகமாகும் முதல் தொடரே அவருக்கு சவாலானதாக அமைந்துள்ளது. இங்கிலாந்து சீதோஷ்ண நிலையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே வெளிநாட்டு மண்ணில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடியது கிடையாது என்ற விமர்சனமும் எழும்பியது.

இந்த நிலையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான நபர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில் "சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமித்தது சரியான நகர்வு என நினைக்கிறேன். ஐபிஎல் தொடர் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை பார்க்க வேண்டும். அவருடைய தலைமைத்துவம் சிறப்பானதாக உள்ளது. பேட்டராகவும், கேப்டனாகவும் இருந்தால் தலைமைத்துவம் நன்றாக இருக்கும் என்பது என்னை பொறுத்தவரையில் முக்கியமான விசயம். நீங்கள் ரன்கள் சேர்க்க வேண்டும். சுப்மன் கில் அதை செய்து கொண்டிருக்கிறார். இது சரியான நேரம்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News