ஐபில் தொடரில் அதிக ரன்கள், அதிக சிக்சர்கள்- சாதனைகளை குவித்த ரோகித் சர்மா
- ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.
- ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் கடந்தார். இதில் 2 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் ரோகித் சர்மா 2 சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி இந்த போட்டியில் 2 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 300 சிகர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். மொத்தமாக 2-வது வீரர் ஆவார்.
முதல் வீரராக கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் 7000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி 8618 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.