சேஸிங்கிலும் டிஃபண்டிங்கிலும் நாங்க தான் கிங்கு.. கொல்கத்தாவை 2 முறை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்
- 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
- கடந்தாண்டு கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
கடந்தாண்டு இதே கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்திருந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.