ஐ.பி.எல்.(IPL)

ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்: கடைசி பந்தில் சென்னையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூரு

Published On 2025-05-03 23:29 IST   |   Update On 2025-05-03 23:31:00 IST
  • ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
  • முதலில் ஆடிய ஆர்.சி.பி. 20 ஓவரில் 213 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு:

ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி 62 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 55 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரொமாரியோ 14 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.

சிஎஸ்கே சார்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீதும் இறங்கினர்.

ஆயுஷ் மாத்ரே தொடக்க முதல் அதிரடியில் இறங்கினார். குறிப்பாக, புவனேஷ்குமார் வீசிய 4வது ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஷேக் ரசீது 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாம் கர்ரன் 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 25 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

3வது விக்கெட்டுக்கு ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா இணைந்தார். இந்த ஜோடி 114 ரன்கள் சேர்த்த நிலையில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய பிரேவிஸ் டக் அவுட்டானார்.

இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 77 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி திரில் வெற்றிபெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

Tags:    

Similar News