null
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளை கணித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்த விவாதங்களும் சமூகவலைதளத்தில் அதிகளவு நிலவி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்த தங்களது கணிப்புகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.
இதே போல முன்னாள் இந்திய வீரர்களான முரளி விஜய், அஸ்வின், சஞ்சய் பங்கர், தீப் தாஸ்குப்தா, ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெறு அணிகள் குறித்து கணித்துள்ளனர்.
இந்திய வீரர்கள் கணித்துள்ள அணிகள்:-
முரளி விஜய்- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
ஆகாஷ் சோப்ரா- இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா
சஞ்சய் பங்கர் - இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
தீப் தாஸ்குப்தா- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
அஸ்வின் - இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து