கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா வெற்றி பெற 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

Published On 2025-09-21 21:59 IST   |   Update On 2025-09-21 21:59:00 IST
  • பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 171 ரன்கள் எடுத்தது.

துபாய்:

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்தபோது பகர் சமான் 15 ரன்னில் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு இணைந்த பர்ஹான், சயீம் அயூப் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக பர்ஹான் சிக்சர், பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்தார்.

இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் சயீம் அயூப் 21 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பர்ஹான் 58 ரன்னில் வெளியேறினார். முகமது நவாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

Tags:    

Similar News