கிரிக்கெட் (Cricket)
null

40 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆஷஸ் தொடரில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Published On 2026-01-09 11:36 IST   |   Update On 2026-01-09 11:41:00 IST
  • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
  • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த டெஸ்டில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 1,454 ரன்கள் எடுத்தது. 1948-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் மொத்தமாக எடுக்கப்பட்ட அதிக ரன்கள் இது தான்.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 160 ரன்களும், 2-வது இன்னிங்சில் பெத்தேல் 154 ரன்களும் விளாசினர். ஒரு அணியில் இரு வீரர்கள் 150 ரன்களுக்கு மேல் எடுத்தும் அந்த அணி தோல்வியை தழுவுவது இது 8-வது நிகழ்வாகும்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த தொடரில் 31 விக்கெட் மற்றும் 2 அரைசதம் உள்பட 156 ரன்களும் எடுத்தார். ஆஷஸ் தொடரில் 30-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு அரைசதமும் ஒரு வீரர் அடிப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1985-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் இயான் போத்தம் இத்தகைய சாதனையை படைத்திருந்தார்.

Tags:    

Similar News