கிரிக்கெட் (Cricket)
null

ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்ற அபிஷேக், மந்தனா

Published On 2025-10-16 16:31 IST   |   Update On 2025-10-16 16:37:00 IST
  • ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் அபிஷேக் 314 ரன்கள் குவித்தார்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்த விருதை தட்டி சென்றுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 314 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வகையில் தொடர் நாயகன் விருதை இவர் தட்டி சென்றார்.

 

மகளிருக்கான செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார். 3 போட்டிகளில் விளையாடிய மந்தனா 1 சதத்துடன் 308 ரன்கள் குவித்தார்.

Tags:    

Similar News