விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2022-05-15 16:10 GMT   |   Update On 2022-05-15 18:41 GMT
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்குகிறது
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் , லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் ஒரு 6, 6 பவுண்டரிகள் எடுத்து 41 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 39 ரன்கள், சஞ்சு சாம்சன் 32 ரன்கள், ரியான் பராக் 19 ரன்கள், டிரென்ட் பௌல்ட் 17 ரன்கள் (நாட் அவுட்), ஜேம்ஸ் நீஷம் 14 ரன்கள், ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ரன்கள் (நாட் அவுட்), ஜோஸ் பட்லர் 2 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளும், அவேஸ் கான், ஜோசன் ஹோல்டர் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.

இதையும் படியுங்கள்.. சொதப்பிய சென்னை- குஜராத் அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்கு
Tags:    

Similar News