விளையாட்டு
உ.பி.யோத்தா, குஜராத் ஜெயண்ட் அணி வீரர்கள்

புரோ கபடி லீக்: குஜராத் - பெங்களூரு அணிகள் வெற்றி

Published On 2022-02-14 01:39 IST   |   Update On 2022-02-14 07:08:00 IST
மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு:

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உ.பி.யோத்தா, குஜராத் ஜெயண்ட் அணிகள் மோதின. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 45-37 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.



முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா அணிகள் மோதின.  விறுவிறுபாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-26 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது.

இன்று இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

Similar News