விளையாட்டு
இந்திய வீரர்கள் ரஹானே, புஜாரா

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் இலக்கு

Published On 2022-01-05 17:44 IST   |   Update On 2022-01-05 17:44:00 IST
கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா, ரஹானே நிதானமாக ஆடி ரன்கள் குவித்தனர்.
ஜோகன்னஸ்பர்க்:

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்களில் சுருண்டது. இதை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்து அவுட்டானது.

2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியாவின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 8, மயங்க் அகர்வால் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய புஜாரா, ரஹானே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்தது. புஜாரா 53, ரஹானே 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  

தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அஸ்வின் 16, ஷர்துல் தாகூர் 28, சமி 0, பும்ரா 77 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி, 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்துள்ளது.  நிதானமாக ஆடிய விஹாரி 40 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இதன் மூலம் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணியை விட 239 ரன்கள் முன்னிலையில் உள்ளது.  240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்குகிறது.

Similar News