செய்திகள்
ரோகித் சர்மா

டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா சாதனை

Published On 2021-11-21 16:34 GMT   |   Update On 2021-11-21 16:34 GMT
150க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 161 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதலிடத்தில் உள்ளார்.
கொல்கத்தா:

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா,  31 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதில், 5 பவுண்டரி, 3 சிக்சர்களும் அடங்கும். 

இந்த போட்டியில் 3 சிக்சர்கள் அடித்ததன்மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லை ரோகித் சர்மா எட்டினார். 

150க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 161 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் 124 சிக்சர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்களில் அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 91 சிக்சர்கள் அடித்துள்ளார்.
Tags:    

Similar News