செய்திகள்
டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்த 3வது வீரர் ரோகித் சர்மா
டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
துபாய்:
டி20 உலக கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா கே.எல். ராகுல், ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 37 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 108 போட்டிகளில் விளையாடி 3,038 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 3,115 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்...நமீபியாவை வீழ்த்தியதுடன் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா