செய்திகள்
பதும் நிசங்கா

டி20 உலகக் கோப்பை- இலங்கையை 142 ரன்களில் கட்டுப்படுத்தியது தென் ஆப்பிரிக்கா

Published On 2021-10-30 12:39 GMT   |   Update On 2021-10-30 12:39 GMT
இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் குவித்தார்.
சார்ஜா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும்  ஆட்டத்தில் இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா அபாரமாக விளையாடி ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அசலங்கா (21), கேப்டன் சனகா (11) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்களே சேர்த்தது. பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.
Tags:    

Similar News