செய்திகள்
பிவி சிந்து

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2021-10-29 22:28 GMT   |   Update On 2021-10-29 22:28 GMT
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தென் கொரிய வீரரிடம் நேர் செட்டில் தோற்று இந்தியாவின் லக்‌ஷயா சென் வெளியேறினார்.
பாரீஸ்:

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து  தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார். 

இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் பூசனனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த தொடரில் இந்திய தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News