செய்திகள்
மார்க் வுட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இருந்து மார்க் வுட் விலகல்

Published On 2021-08-23 14:31 GMT   |   Update On 2021-08-23 14:31 GMT
காயம் காரணமாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
லண்டன்:

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில்  முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது.  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதையடுத்து, நாளை மறுநாள் (25-ம்தேதி)  மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்டுகளிலும் வென்று 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இருக்கிறது.

எப்படியாவது 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த நிலையில்  வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், மார்க் வுட் தற்போது விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News