செய்திகள்
ஆடுகளம் மூடப்பட்டிருக்கும் காட்சி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

Published On 2021-06-21 10:46 GMT   |   Update On 2021-06-21 10:46 GMT
முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு, 2-வது நாள் 64.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இன்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

போட்டி கடந்த 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று மதியம் 3 மணிக்கு 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News